Sunday 13 May 2018


 தருமபுரி மாவட்ட 5-வது மாநாடு 10-5-2018 வியாழக்கிழமை காலை 10-30 மணிக்கு மாவட்டத் தலைவர் தோழர். முனியன் அவர்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் மாவட்டச்செயலர் தோழர் சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்றார்  மாவட்டத்துணைத்தலைவர் தோழர் பன்னீர்செல்வம் அஞ்சலி உரை ஆற்றினார். மாநிலத் துணைத் தலைவர் தோழர் வேடியப்பன் மாநாட்டு துவக்க உரை ஆற்றினார்.மாநிலத் துணை செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் மாநில தன் துணைத்தலைவர் தோழர் முத்துக்குமரன் மாநில செயலாளர் தோழர் முத்தியாலு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  
மாவட்ட பொதுமேலாளர் திரு K.பாலாஜி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

  SNEA மாவட்டச் செயலாளர் தோழர் மகேஷ்குமார்,  AIBSNLEA- தோழர் ராமசுந்தரம் FNTO- தோழர் முனுசாமி, TEPU- தோழர் அம்மாசி, NFTE மாவட்டச் செயலாளர் தோழர் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

புதிய நிர்வாகிகளாக தோழர் முனியன், தோழர் சுப்ரமணியம், தோழர் வணங்காமுடி ஆகியோர் முறையே தலைவர்,  செயலாளர்,  பொருளாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர் வணங்காமுடி நன்றி கூற மாநாடு நிறைவு பெற்றது.
மாநாட்டில் சுமார் 80 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அனைவருக்கும் மதிய உணவு வடை பாயாசத்துடன் வழங்கப்பட்டது.

 இந்த மாதம் 5 புதிய உறுப்பினர்கள் நம் சங்கத்தில் இணைந்தார்கள். மாநாடு நடைபெறும் அன்று மேலும் 5 புதிய உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் .
இத்துடன் நம் தருமபுரி மாவட்ட சங்க உறுப்பினர் எண்ணிக்கை 170 ஆகி உள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக தொடரும்.

No comments:

Post a Comment