Sunday 6 May 2018

கடலூரில் சுபலக்ஷ்மி திருமண மண்டபத்தில் 05-04-18 காலை 10-00 மணி அளவில் தேசியக்கொடியினை தோழர் முத்தியாலு பறக்கவிட , சங்கக்கொடியினை தோழர் ஜெயராமன் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே பறக்க விட , கடலூர் மாவட்டத்தின் ஆறாவது மாவட்ட மாநாடு சிறப்பாகத் துவங்கியது.
மாவட்ட செயலர் தோழர் என்.திருஞானம் அனைவரையும் வரவேற்றார்.  அவர் மாவட்ட செயலாளராக பொறுப்பு எடுக்கும்போது மாவட்ட சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை சுமார் 450 பேர்கள். இன்று அனைவரின் தளரா பணியின் காரணமாக உறுப்பினர் எண்ணிக்கை 730 ஆக உயர்ந்துள்ளதாக நன்றிப்பெறுக்கோடு கூறினார்.மாவட்ட தலைவர் தோழர் இளங்கோவன் தலைமைத்தாங்க பரந்து விரிந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 450க்கு 
 மேற்பட்ட தோழர்கள் , தோழியர்கள் உற்சங்கமாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழுப்புரம் பகுதி தோழர்கள் சுமார் 62 பேர் ஒரு தனி பேருந்தையே வாடகைக்கு எடுத்து அதில் வந்து சென்றது ஒரு முத்தாய்ப்பு.
நம் சங்க தலைவர்கள் தோழர்கள் DG , G.நடராசன், K.முத்தியாலு , T.S. விட்டோபான் போன்றவர்களும் , நிர்வாகத்தின் தரப்பிலிருந்து திருமதி.சாந்தா DGM  Admin கலந்து கொண்டு வாழ்த்துரைத்தார். 
மதிய உணவுக்குப்பின் மாவட்ட பொருளாய்வு குழு துவங்கியது. பிறகு கீழ்கண்ட தோழர்கள் மாவட்ட நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
தலைவர் தோழர். ஜெயராமன்,   செயலர் தோழர் அசோகன் மற்றும் பொருளாளர் தோழர் ஹாஜா கமாலுதீன்
புதிய நிர்வாகப்பணி சிறக்க தமிழ் மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது. 
தோழர் ஹாஜா கமாலுதீன் அனைவருக்கும் நன்றி பாராட்ட மாவட்ட சங்க பொதுக்குழு கூட்டம் இனிதே நிறைவேறியது.
லிங்க் களை க்ளிக் செய்து போட்டோக்கள் மற்றும் விடியோக்களைக் காண்க
CLICK HERE TO SEE ALL PHOTOS

Click here to see FLAG HOISTING CEREMONY
Click to see Com DG clears the doubt raised in the CDL Conference Video



No comments:

Post a Comment