Monday 18 December 2017

சமீபத்தில் நடந்துமுடிந்த மாநில செயற்குழு சம்பந்தமான தணிக்கை செய்யப்பட்ட வரவுசெலவுக் கணக்கு மாவட்டப்பொருளாளர் தோழர். R.பூபதி அவர்களால் வெளியிடப்பட்டது.
NFTE மாவட்டச்செயலர் தோழர்.V.மாரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நடந்து முடிந்த 2 நாள் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு நமது சங்கம் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்கு நன்றி தெரிவித்தார்.
மாவட்டச்செயலர் தோழர் P.முருகன் அவர்களும் மாநிலதுணைச்செயலர் தோழர்.N.நாகேஷ்வரன் அவர்களும் ஓய்வூதியர் தினம் பற்றிய வரலாற்றை நினைவுகூர்ந்தனர். ஓய்வூதியத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று தீர்ப்பு வழங்கி 35 ஆண்டுகள் உருண்டோடிய போதிலும் 78.2 பிரச்னையிலும் 01.01.2006 க்கு முன்பு ஓய்வுபெற்ற BSNL ஓய்வூதியர்களுக்கு 33 ஆண்டுப்பணி, 20 மாத சராசரிசம்பள கணக்கீடு போன்றவை மாற்றப் படாமல் பாரபட்சம் இன்றும் தொடர்வது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.
சிவகங்கை கிளைச்செயலர் தோழர்.A.சந்திரன் அவர்களும் காரைக்குடி கிளைச்செயலர் தோழர் K.சுந்தரராஜன் அவர்களும் நன்றி உரை நிகழ்த்தினர்.

No comments:

Post a Comment