Monday 16 October 2017

காரைக்குடி மாவட்ட செய்திகள்
15-10-2017அன்று காலை 10-30 மணிக்கு  சிவகங்கையில் கிளைத்தலைவர் திரு.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் கிளைக்கூட்டம் நடைபெற்றது.

செயலர் திரு.சந்திரன் அவர்கள்  அனைவரையும் வரவேற்றுப்பேசினார். மாநிலசெயற்குழு சம்பந்தமாக பரமக்குடியில் எடுத்த முடிவுகள் பற்றி பேசி உறுப்பினர்கள் தாராள நிதியுதவி தர வேண்டுகோள் விடுத்தார்.

மாவட்டச்செயலர் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வருவதால் மாநில துணைச்செயலர். திரு.நாகேஷ்வரன் அவர்கள் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்  அளித்ததோடு பொதுவான ஓய்வூதியர் பிரச்னைகள் பற்றியும் விரிவானதொரு விளக்கவுரையாற்றினார்.

மருத்துவப்படி பட்டுவாடாவில் சீனியருக்கும் ஜூனியருக்கும் இடையே உள்ள பாகுபாடு பற்றியும் அதை நீக்குவதற்கு நமது சங்கம் முயற்சி எடுக்க வேண்டும் என்பதுபற்றி வந்திருந்தோர் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
திரு.குமார் DGM அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்திப்பேசினார்.

கிளைப்பொருளர் திரு.வாழ்க வளமுடன் இராமமூர்த்தி அவர்கள் நன்றி கூறினார். 

கூட்டம் மதியம் 1-00மணிக்கு நிறைவுபெற்றது.
Sivaganga Palace

No comments:

Post a Comment