Tuesday 2 May 2017

வேலூர் மாவட்ட AIBSNLPWAசங்கம் மே தின விழாவை சிறப்பாக கொண்டாடியது..மாவட்ட தலைவர் தோழர் முத்துக்குமரன் , மாநில  துணைத்தலைவர் தோழர் முருகன் , மாவட்ட செயலர் தோழர் இராஜேந்திரன் , தமிழ் மாநில வெப் மாஸ்டர் தோழர் மோகன் மற்றும் பலர் மே தின சிறப்புகளை எடுத்துக்கூறி இன்னுயிர் ஈந்த தொழிலாளிகளுக்கு வீர வணக்கம் அளித்தனர். மாநில தலைவர் தோழர் இராமாராவ் அவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது ஆனால் ஒரு சிறிய விபத்து காரணமாக அவரால் கலந்து கொள்ள இயலவில்லை.

நம் சங்க செயல்பாடுகள் , ரசீது அளிக்காமல் மருத்துவ அலவன்ஸ் பெறுதல் ,அதற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தல் , மாவட்ட சங்க செயல்பாடுகள் ,78.2 சத நிலுவை தொகை , நடைபெறவுள்ள பென்ஷன் அதாலத் ஆகிய விஷயங்களை விரிவாக எடுத்துக்கூறினர்சுமார் 75 உறுப்பினர்கள் உற்சாகத்துடன்  கலந்து .கொண்டு சிறப்பு செய்தனர்.

வேலூர் மாவட்ட சங்க முன்னணி தோழர் பொன் .ஆறுமுகம் அவர்கள் தன் ஐம்பதாவது திருமண பொன் விழாவினை இக்கூட்டத்தில் கொண்டாடினார். 2005 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்கம் ஒன்றை உருவாக்கி திறம்பட நடத்தி பின் அகில இந்திய அளவில் AIBSNLPWA ஆரம்பிக்கப்பட்டவுடன் அதனுடன் தம் சங்கத்தை இணைத்து ஒன்றுபட்ட AIBSNLPWA சங்கத்தின் மாவட்ட தலைவராக சிறப்பாக பணியாற்றியவர்.
தோழர்கள் பொன் .ஆறுமுகம் அவர்களின் செயல்பாடுகளை ,அன்பான அணுகுமுறையினை சங்கம் வளர அவர் பாடுபட்ட விதங்களை மிக சிறப்பாக பாராட்டி பேசினார்கள்.
தன் திருமண பொன் விழாவை  அனைவருக்கும் மதிய உணவு அளித்து  கொண்டாடினார் .உடன் வந்திருந்த அவர் துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி பாராட்டப்பட்டது .
குடும்ப பாசத்துடன் சங்கம் வளர்க்கும் வேலூர் மாவட்ட  சங்க அணுகுமுறை   போற்றுதற்குரியது.


No comments:

Post a Comment