Friday 21 April 2017

அன்பு தோழர்களே / தோழியர்களே 
அனைவருக்கும் வணக்கம்.
ரசீது செலுத்தாமல் மருத்துவ படி பெறுவதற்கான விருப்ப படிவம் வழங்குவது குறித்த  விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன 
ஏப்ரல் மாதம் 22 ( சனிக்கிழமை ) மற்றும் 23 (ஞாயிறு ) தேதிகளில்  வேலூர் காந்திபுரத்தில் அமைந்துள்ள பிரம்ம ஞானசபை யில் நடைபெறும்.
ஏப்ரல் 24 (திங்கள்)  -------           குடியாத்தம் 
ஏப்ரல் 25 ( செவ்வாய் ) --------- ராணிப்பேட்டை 
ஏப்ரல் 26 ( புதன்)            ----------திருவண்ணாமலை 
ஆகிய ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
திருப்பத்தூர் , வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் அங்குள்ள தோழர்கள் தனியாக சிறப்பு முகாம்கள் நடத்துகிறார்கள்.
விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட சான்று நகல்களை இணைக்க வேண்டும்.
1. PPO Copy - Xerox 
2. MRS  கார்டு நகல் 
3. வங்கி Paasbook முதல்பக்க நகல் 
4.PAN கார்டு நகல் 
5. ஆதார் கார்டு நகல் 
ஆகியவற்றை விருப்ப மனுவில் இணைக்க வேண்டும்.மேலும் அந்த மனுவில் 
1. உங்கள் பெயர் மற்றும் முகவரி 
2. ஒய்வு பெற்ற தேதி , மாதம் & வருடம்.
3. ஒய்வு பெரும் சமயம் வகித்த பதவி பெயர் 
4. நீங்கள்  ஓய்வூதியம் பெரும் வங்கியின் பெயர் ,மற்றும்  கிளை 
5.சேமிப்பு வங்கி கணக்கு எண் 
6..IFSC Code 
7.  உங்கள் தொலைபேசி எண்  மற்றும் கைப்பேசி எண்,
இவைகளை தவறாமல் தெளிவாக குறிப்பிடவும்.
ஒரு முக்கிய விண்ணப்பம் 78.2 சத நிலுவைத்தொகை பெற்ற தோழர்கள் மறக்காமல் சங்க நன்கொடையினை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
சிறப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஒத்துழைப்பினை உளமார நாடுகிறோம்.
நன்றி !   வணக்கம் !! 
தோழமை வாழ்த்துக்களுடன் 
AIBSNLPWA 
வேலூர் மாவட்டம்.



No comments:

Post a Comment