Wednesday 19 April 2017

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தின் காரைக்குடி கிளையின் நடைமுறைக்கூட்டம் 19.04.2017 அன்று காலை 11மணிக்கு திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிளைச்செயலர்.திரு.சுந்தரராஜன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப்பேசினார். மாவட்டச்செயலர் முருகன் அவர்களும் மாநில உதவிச்செயலர் நாகேஷ்வரன் அவர்களும் மருத்துவப்படி,இரவுநேர இலவச அழைப்புகள் பற்றியும் லோக்கல் என்ற முறைக்குப்பதிலாக மீட்டர்கால் என்றமுறையில் விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது பற்றியும்  விரிவாக எடுத்துரைத்தனர்.
விருதுநகரில் நடந்த மாநிலசெயற்குழு முடிவுகள் மற்றும்78.2ல் இன்னும் நிறையப்பேர்களுக்கு உத்தரவு அனுப்பப்படாமல் உள்ள காலதாமதம் பற்றியும் உறுப்பினர்கள்கேட்ட கேள்விகளுக்கு  பதிலுறைத்தனர்.2007க்கு முன்பு பணிநிறைவுபெற்றவர்களுக்கு உத்தரவு வராதிருந்தால் அல்லது உத்தவு வந்து பட்டுவாடா செய்யப்படாமல் இருந்தால் மாநிலசங்க வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்ட கடிதத்தின் நகல் விரைவில் மாவட்டசங்கத்தால்  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மருத்துவப்படியை மீண்டும் ஓய்வூதியர்களுக்கு பெற்றுத்தந்த அகில. இந்தியத்தலைமையை அனைவரும் மனமாறப்பாராட்டினார்கள்-மட்டற்ற மகிழ்ச்சியைத்தெரிவித்தனர்.
கடுமையான வெயிலையும்பொருட்படுத்தாமல் கூட்டத்திற்கு வந்துகலந்து கொண்ட அனைவருக்கும் கிளைப்பொருளர் இராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.
நாகேஷ்வரன்





No comments:

Post a Comment