Wednesday 15 March 2017

பாண்டிச்சேரி மாநில கிளையில் மார்ச் மாத கூட்டத்தில்  "அகில உலக மகளிர் தினம் " சிறப்பாக 11-03-2017 அன்று கொண்டாடப்பட்டது.
மாவட்ட தலைவர் தோழர் .M V .இராமகிருஷ்ணன் தலைமை ஏற்றார் .மாவட்ட செயலர் தோழர் அன்பழகன் விழா நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினர். மாநில உதவி பொருளாளர் தோழர் சதாசிவம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .
கூட்டத்தில் கலந்து கொண்ட தோழியர் கௌரி  (Retd STS ) மற்றும் குடும்ப ஓய்வூதியர் தோழியர் ஜெய ராகினி மற்றும் பலர்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் .
சுமார் 60 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த விழா இனிப்பு,காரம் காபி உபசரிப்போடு இனிதாக முடிவுற்றது.
மாவட்ட சங்க செய்திகள் 
இந்த மாவட்ட உறுப்பினர் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது 170 உறுப்பினர்கள் உள்ளனர் . இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த முயன்று வருகிறோம்.எந்த சங்கத்திலும்  சேராமல் உள்ள ஓய்வூதியர்களை அணுகி வருகிறோம்.
78.2 சத நிலுவைத்தொகை சுமார் 10 உறுப்பினர்கள் ( PRE -2007) பெற்றுள்ளனர். தங்கள் மகிழ்ச்சியினை சங்க தோழர்களுடன் பகிர்ந்து கொண்டு தம் நன்றியை தெரிவிக்கும் முகத்தான் தோழர் வெங்கட்ராமன் (TTM  ஒய்வு )ரூ 5000/- , தோழர் வைத்திலிங்கம் (DE ஒய்வு) ரு 3000/-, குடும்ப ஓய்வூதியர் தோழியர் அமுதா ரூ 2000/- தோழியர் தனலட்சுமி ரூ 2000/- மற்றும் சிவகுமார் ( SDE  ஒய்வு) ஆகியோர் நன்கொடை தொகையினை அளித்துள்ளனர்  மத்திய ,மாநில சங்கங்களின் சீரிய வழிகாட்டுதலின் பிரகாரம் சிறப்பாக இயங்கி வருகிறது. 

No comments:

Post a Comment